தப்பியது ஒரு வரலாறு
மும்பை:
குஜராத் மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள 5000 வருடம் பழமை மிக்க தொலாவிரா நகரம்எவ்வித சேதமும் இல்லாமல் தப்பித்தது.
இந்தியாவின் முதல் நகரம் என்றழைக்கப்படும் தொலாவிரா ஹரப்பா நாகரிகத்தின்போது தோன்றியதாகும். அப்போது தோன்றிய மொகஞ்சதாரோ,கான்வெரிவாலா, ராகிகாரி, ஹரப்பா ஆகிய 4 நான்கு நகரங்கள் மிக முக்கியமான நகரங்களாகும். ராகிகாரி தவிர பிற 3 நகரங்களும் தற்போதுபாகிஸ்தான் கீழ் உள்ளன.
தொலாவிரா நகர் தற்போது குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் அருகே உள்ளது. இங்கு ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டும் எவ்விதபாதிப்பும் இல்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.
தானேயைச் சேர்ந்த விஜய் படேகர் கூறுகையில், ஹரப்பா மட்டும் எப்படித் தப்பித்தது என்பது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அங்கு சென்றுள்ளதுஎன்றார்.
டாக்டர் படேகர் 10 வருடங்களுக்கு முன் தொலாவிராவுக்குச் சென்று அங்குள்ள கட்டிடங்களைப் பார்த்தார். இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் பிறகட்டிடங்களை விட பாதுகாப்புக்கள் அதிகமாக உள்ளது பற்றியும் ஏற்கனவே கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications