392 கிராமங்களில் இன்டர்நெட் மையங்கள்
கோவை:
சென்னையைத் தவிர தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் 392 இடங்களில் இன்டர்நெட் மையங்களைத் தொடங்கபாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் அடுத்த மார்ச் மாதஇறுதிக்குள் செயல்படத் துவங்கும்.
கோவையில் ஒரு பள்ளியில் இன்டர்நெட் மையத்தைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறைபொதுமேலாளர் நாகலிங்கம் கூறியதாவது:
சென்னையைத் தவிர மற்ற பகுதிகளில் கிராமப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் இன்டர்நெட் மையங்களைஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். நகர்ப் புறங்களைப் போன்று கிராமப் புறங்களில் வரவேற்பு இல்லை என்றாலும்,இங்கு மையங்களை ஏற்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இன்டர் நெட் மையங்களுக்கு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இணைப்புகளை வழங்கும். இதில் ஆண்டுக்குஆயிரத்து 500 மணி நேர இணைப்பு இலவசமாக வழங்கப்படும். மேலும், டெலிபோன் கட்டணத்தில் 25 சதவீதம்கமிஷன் வழங்கப்படும்.
கோவையில் உள்ள 19 தொலைபேசி வட்டங்களில் 11 வட்டங்களில் இந்த இன்டர்நெட் மையம் துவங்கப்படுகிறதுஎன்றார் அவர்.












Click it and Unblock the Notifications