ஜப்பானிலிருந்து ராணுவம்
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் வகையில், 100 ஜப்பான் ராணுவ வீரர்கள் பூஜ் வருகிறார்கள்.
இதுகுறித்து, டெல்லியிலுள்ள ஜப்பான் தூதரக அதிகாரிகள் கூறுகையில்,
நிவாரணப் பணிக்காக பூஜ் வரும் ராணுவ வீரர்கள் கட்ச் மாவட்டம் பூஜ்ஜில் ஒரு வாரம் இருப்பார்கள். அவர்கள் 4000 கூடாரங்கள்அமைப்பதற்கான பொருட்களையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். 8 பேர் தங்கும் வகையில் இந்த கூடாரங்கள் இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலில் மருத்துவக்குழுவை அனுப்புவது என்று ஜப்பான் திட்டமிடப்பட்டிருந்தது.அதற்குப்பின் தற்போது கூடாரங்கள் அமைத்துக் கொடுப்பதுதான் அத்தியாவசியப்பணி என்று தெரிய வந்தது. இதையடுத்து கூடாரங்கள் அமைப்பதற்குத்தேவையான ராணுவ வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
ஏற்கனவே பூகம்பம் ஏற்பட்ட ஜனவரி 26 ம் தேதி ஜப்பான் ரூ 3 கோடிக்கான நிவாரணப் பொருட்களையும், 3.94 கோடி அத்தியாவசியப்பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஜனவரி 30 ம் தேதி முதல் ஜப்பானைச் சேர்ந்த 19 பேர் கொண்ட டாக்டர்கள் குழு குஜராத்தில் பணிபுரிந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications