புலிகளுடன் பேசத் தயார் .. சுதந்திர தின உரையில் சந்திரிகா
கொழும்பு:
18 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புலிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஇலங்கையின் 53வது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். ரும்பவில்லை.எனினும் போர்நிறுத்தமானது பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தைபொறுத்தே அறிவிக்கப்படும்.
கடந்த இருமாதங்களுக்கு முன் ராணுவநடவடிக்கை மூலம் தீர்வு காணப்படும் என்ற சந்திரிகா தற்போது ராணுவம் யாழ்ப்பாணப் பகுதியில் புலிகளின் சிலபகுதிகளை கைப்பற்றியுள்ள போதும் அது பற்றி சுதந்திர உரையில் குறிப்பிடவில்லை.
இலங்கையின் அமைதி முயற்சியானது அரசு கடந்த ஆகஸ்ட்டில் சட்டமாக்க முயன்ற புதிய அரசியலமைப்பின் அடிப்படையில் அமையும் என்றார்.
சிறுபான்மையினருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் புதிய அரசியலமைப்பு மசோதா எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததால் கடந்த ஆட்சியில்சட்டமாக்கப்படவில்லை. எனினும் அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் சந்திரிகா தெரிவித்தார்.
இதனிடையில் அரசுப் பத்திரிக்கையான சன்டே அப்சர்வர் தனது இதழில், சந்திரிகாவின் அறிவிப்பு நார்வே அமைதிக்குழு தலைவர் எரிக் சோலைம் அதிபருடன்நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவே என்கிறது.
நார்வே அமைதிக்குழுவின் முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளது. இதில் நார்வே தூதுக்குழு தயாரித்துள்ள திட்டத்தின் சில பகுதிகளுக்குபுலிகளின் லண்டன் பிரதிநிதியான ஆன்டன் பாலசிங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவற்றை செயல்படுத்துவதற்கு அரசுடன் பேச்சு நடத்தப்படுகிறது.
இத்திட்டப்படி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களின் சப்ளை செய்வதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக புலிகள்இலங்கையின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது என்றும் கூறப்பட்டுள்ளதாக சன்டே அப்சர்வர் தெரிவிக்கிறது
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications