வீரப்பன்: கருணாநிதியின் தேர்தல் தந்திரம் .. ஜெ.
வீரப்பனுடன் நடந்ததாகக் கூறப்படும் மோதல் குறித்து கூறப்படுவது, தமிழக முதல்வர் கருணாநிதியின் தேர்தல்தந்திரங்களில் ஒன்றுதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
வீரப்பனைப் பார்த்ததாக அதிரடிப்படை வீரர்கள் கூறுவது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், வீரப்பன்கும்பலுடன் சண்டை போட்டதாகவும், ஆனால் அவர்கள் தப்பி விட்டதாகவும் கூறப்படுவது நம்பும்படியாகஇல்லை.
பொறுப்பான அரசியல் தலைவர் என்றமுறையில் இந்த சம்பவத்தினால் எழுந்துள்ள சந்தேகங்களை தமிழக மக்கள்முன்பு வைக்க வேண்டியது எனது கடமை. இதுகுறித்து அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
அதிரடிப்படை வீரர்களுக்கு நெருக்கத்தில் வீரப்பன் ஆட்கள் இருந்ததாகவும், ஆயினும் கூட அவர்களை பிடிக்கமுடியவில்லை என்று கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. சினிமாக் கதை போல இது உள்ளது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications