For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி அலுவலகம் சூறையாடல் .. விசாரணைக்கு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய தமிழகம் கட்சியின் அலுவலகம் ஜனவரி 6-ம் தேதி தாக்கப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ்விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 6-ம் தேதி புதிய தமிழகத்தின் சென்னை அலுவலகம் தாக்கப்பட்டது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டசிலருடைய ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

அரிவாள்களுடன் வந்த அக்கும்பல், அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்ப்பேட்டைக்கு வந்துஅலுவலகத்தை சூறையாடியது. இந்தத் தாக்குதலையடுத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாக்குதல்நடத்திய கும்பல் எடுத்துச் சென்று விட்டதாகவும், ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் சேதமடைந்ததாகவும்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தாக்குதல் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X