ரஜினியிடம் மோசடி .. நரசிம்ம ராவ் மகன் கைது
ஹைதராபாத்:
தமிழக நடிகர் ரஜினி காந்திடம் 2.6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மகனும் ஆந்திராவின் முன்னாள் கல்விமந்திரியுமான டாக்டர்.பி.வி.ரங்கா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகவேந்திராவின் தீவிர பக்தரான ரஜினி காந்திடம் ராகவேந்திரா மகாத்மியம் என்ற திரைப்படத்தில் நடிக்க ரங்கா ராவ் கேட்டபோதுமறுத்துவிட்ட ரஜினியிடம் படத் தயாரிப்புச் செலவிற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதனை ஒப்புக் கொண்ட, ரஜினியும் 2.6 கோடி ரூபாய் வரை பணம்கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்டபின் படத்தை தயாரிக்காமல் தன் சொந்த கடன்களை அடைக்க அப்பணத்தை ராவ் பயன்படுத்தியுள்ளார். படம்தயாரிக்கப்படாததை அறிந்து ரங்காராவிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் ரஜினி.
அதற்காக ரங்காராவ் கொடுத்த இரண்டு காசோலைகளும் ரங்காராவின் கணக்கில் பணமில்லாததால் திரும்பிவிட்டன. இதனையடுத்து ஹைதராபாத்போலீசில் ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ரங்காராவையும், அவரின் உதவியாளர் கோபால கிருஷ்ண ரெட்டியையும் 15நாள்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இருவரின் ஜாமீன் கோரிக்கையையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். எனினும், ராவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ராவை மருத்துவபரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.