For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க உதவி வந்தது

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

அமெரிக்காவிலிருந்து 4, சி-17 ரக விமானங்களில் 1 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்கள் அகமதாபாத் வந்துள்ளன.

ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக இந்த விமானங்களில் ஆயிரக்கணக்கில் கம்பளிகள், போர்வைகள்,தலையணைகள் ஆகியவை வந்துள்ளன.

இதுகுறித்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பிரிவு செய்தித் தொடர்பாளர் டாம் க்ரெளசன் கூறுகையில், 92 பெரிய கூடாரங்கள் அமைப்பதற்கானபொருட்கள், 10,000 கம்பளிகள், தூங்குவதற்குத் தேவைப்படும் தலையணை, போர்வைகள் 10,000 ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளோம். குடிநீர்விநியோகம் செய்வதற்கான 2 இயந்திரங்களையும் நாங்கள் கொணடு வந்துள்ளோம் என்றார்.

இவைதவிர வெள்ளிக்கிழமை 20 பேர் கொண்ட அமெரிக்க மருத்துவக்குழுவும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் மோர்பி ஆகிய நகர்களுக்குவந்தனர்.

ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து மீட்புக்குழுவினர், மோப்பநாய்ப்படை, மருத்துவக்குழுவினர் ஆகியோர் ஏற்கனவேஅனுப்பப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் விமானநிலைய இயக்குநர் சிட்காரா கூறுகையில், பொதுவாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு தினமும் 14 முறை விமானங்கள் வந்துபோகும். ஆனால் இங்கு பூகம்பம் ஏற்பட்டதையடுத்து எங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளது. வெவ்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை 44 சர்வதேச விமானங்கள் நிவாரணப் பொருட்களைஏற்றிக் கொண்டு வந்துள்ளன என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X