For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ம.க. பாண்டி மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பதில் பா.ம.க. குறியாக இருக்கிறது. முதல்வர் பதவியையும் சில முக்கியதொகுதிகளையும் பா.ம.க.வுக்கு கொடுப்பதற்கு பாண்டிச்சேரியில் கண்ணனால் துவங்கப்பட்ட பாணடிச்சேரி மக்கள்காங்கிரசில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பும் பா.ம.க. தனக்கு வெற்றி கிடைக்கும் என சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறது.

காசுக்கடை, உப்பளம், உழவர்கரை. குருவிநத்தம், நெட்டப்பாக்கம் போன்ற சில குறிப்பிட்ட இடங்களில்கண்ணனுக்கு செல்வாக்கு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் எண்ணுகின்றனர். இந்த தொகுதிகளில்போட்டியிட சிலர் விருப்பம் தெரிவித்து சீட் ரிசர்வ் செய்துள்ளனர்.

இந்த தொகுதிகளை கொடுக்க பா.ம.க. மறுத்து வருகிறது. இந்த தொகுதிகளில் பா.ம.க.வுக்கு செல்வாக்குஇருப்பதாக அந்த கட்சியினர் கருதுவதால் அவர்கள் இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.மேலும் நெட்டப்பாக்கம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்தான் பாண்டியில் பா.ம.க. முதல்வராக வருவார்எனவும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்த 3 தொகுதிகள் காரணத்தால் பா.ம.க.வுக்கும், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே விரிசல்ஏற்பட்டுள்ளது.

பா.ம.க.வுடன் சேர்வதால் தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் கிடைக்காது எனவும் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ்கட்சியினர் சிலர் கருதுகின்றனர். இதனால் பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.

கண்ணனுக்கு முதல்வர் பதவி என்பது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இப்போது பா.ம.க.வுடன்கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் முதல்வர் பதவி பா.ம.க.வுக்கே செல்லும் என்பதால் அக்கட்சியுடன்கூட்டணி அமைப்பது குறித்து கண்ணன் மறு பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X