சீக்கியர் படுகொலையை எதிர்த்து பந்த்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
சீக்கியர்கள் படுகொலை தொடர்பாக சீக்கிய இயக்கங்கள் அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய பந்த்தை முன்னிட்டு ஜம்மு மற்றும் உதம்பூரில் ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் திஜியானா ஆஸ்ரம், நானக் நகர் உள்ளிட்ட வன்முறை வெடிக்கக் கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்விக் கூடங்களுக்கும், சிலஅரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில குருத்வாரா பிரபந்த வாரியம் உள்ளிட்ட சில சீக்கிய இயக்கங்கள் சீக்கியர்களின் படுகொலையை கண்டித்து ஜம்மு மற்றும் உதம்பூரில் கண்டனஊர்வலம் செல்ல முடிவெடுத்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கண்டன ஊர்வலத்தின் போது ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தியதால் போக்குவரத்தை சீர்குலைந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications