கேரளாவில் குஜராத் சிறுமி
கொல்லம்:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் தப்பிய 9 வயது குஜராத்தி சிறுமி, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மலேசிய குடும்பத்தினருடன் கேரளாவுக்குவந்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள 7 வது அட்வன்டிஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த ஜோதி என்ற சிறுமி குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட தினத்தன்றுவிளையாட்டு மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு விட்டதால் சிறுமி ஜோதியின் வீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.அவரது குடும்பமே மண்ணோடு மண்ணாக உயிரோடு புதைந்தது. தப்பித்த ஜோதியின் அம்மா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தன்னால் உயிர்பிழைக்க முடியுமோ அல்லது உயிர்பிரிய நேரிட்டால் தனது மகள் ஜோதியை யார் காப்பாற்றுவார்கள் என்று கருதி ஜோதியை தனதுபக்கத்து வீட்டு மலேசிய குடும்பத்தினருடன் கேரளாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
ஜோதியின் குடும்பத்தினரும், மலேசிய குடும்பத்தினரும் குஜராத் மணிநகரில் பல வருடங்களாக பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஜோதி தனதுபக்கத்து வீட்டு குடும்பத்தினருடன் சனிக்கிழமை கொல்லம் வந்தடைந்தார். குஜராத்தில் பூகம்ப பீதி அடங்கிய பின் ஐந்தாறு மாதங்களுக்குப் பின் மீண்டும்ஜோதி தன் வீட்டுக்குத் திரும்புவார்.
யு.என்.ஐ.