கொல்கத்தா உதவிக்கரம்
கொல்கத்தா:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுக்க கொல்கத்தாவிலுள்ள குஜராத்தியர்கள் முன்வந்துள்ளனர்.
கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் குஜராத் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து 11 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளனர். இதில் பிரபலதொழிலதிபர்கள் ரவி டோடி, மஹேந்திரா ஜாலன், ஷியாம் சுந்தர் தால்மியா ஆகியோர் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்கள். இவர்கள், குஜராத்தில்மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வார்கள்.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் குஜராத் மக்கள் நிவாரண அமைப்பினர் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகநிவாரண உதவி விரைவில் செய்து கொடுக்கப்படும். ஏனெனில் கட்ச் மாவட்டம்தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
இப்போது குஜராத் பூகம்பத்திற்காக நிவாரணம் நிதி வசூல் செய்தும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக விநியோகித்தும் வருகிறோம்.கொல்கத்தாவிலுள்ள தனியார் தொண்டு நிறுவனங்களான குஜராத் கிளப், குஜராத் பிரண்ட்ஸ், குஜராத் ஸ்போர்ட்ஸ் யூனியன் ஆகியவையும் நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.