மணிப்பூரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
மணிப்பூர் தீவிரவாதிகள் 8 பேரை அஸ்ஸாம் ரைபிள் படை சுட்டுக் கொன்றதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் இம்பாலுக்கு வெளியே, மூங்கில் காட்டில் பதுங்கியிருந்த போது நடைபெற்ற தேடுதல்வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள் மாலை 6 மணி முதல் 36 மணிநேர பந்திற்கு அவ்வியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மியான்மரை ஒட்டியுள்ள இப்பகுதியில் அதிக அதிகாரம் கோரும் இயக்கம் முதல் தனிநாடு கோரும் இயக்கம் வரை 12க்கும் மேற்பட்ட தீவிரவாதஇயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இப்போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications