ரஜினியை ஏமாற்றிய ரங்காராவ் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்:
நடிகர் ரஜினிகாந்தை ஏமாற்றியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மாராவின் மகன்ரங்கராவ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகனுமான ரங்காராவ் ஸ்ரீராகவேந்திர சுவாமி மகாத்மியம் என்ற பெயரில் திரைப்படம் எடுப்பதாக கூறி ராகவேந்திர சுவாமி பக்தரான நடிகர்ரஜினிகாந்திடம் ரூ 2.6 கோடி பணம் வாங்கி படம் எடுக்காமல் மோசடி செய்தார்.
இதையடுத்து ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில் ரங்கராவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நிதிபதி உத்தரவிட்டார்.
ரங்கராவ் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறியதன் பேரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு உடலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் கூறியதும்அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்கு நெஞ்சுவலிப்பதாக ரங்கராவ் கூறியதும் அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில்இருக்கும் நிஜாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications