மக்கள் தொகை கணக்கெடுக்க உதவுங்கள்
சென்னை:
தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இந்த மாதம் 9-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பணியில்தமிழகத்தில் மட்டும் ஒன்றைரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை மட்டுமில்லாது. மக்களின் சமூக, கலாச்சார, பொருளாதாரப்பிண்ணனி, இடப் பெயர்ச்சி, இனப் பெருக்கம் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படும்.
இதில் கிடைக்கும் புள்ளி விவரங்கள் மூலம்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிமற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தனி நபர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே இந்த பணியில் சரியான தகவல்களை வழங்கிஇந்த பணி வெற்றி பெற தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.