விளையாட்டுக்கு அதிக மைதானங்கள்...புதுவை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானஙகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பாண்டிச்சேரி சுற்றுலாமற்றும் கல்வித் துறை மந்திரி ரங்கசாமி தெரிவித்தார்.
அகில இந்திய கால்பந்து போட்டியின் (சிவில் சர்வீஸ்) துவக்க விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இப்போட்டியினை துவக்கி வைத்து பேசிய பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கூறுகையில், ஜாதி மதங்களை கடந்து நாடு முழுவதிலும் இருந்து விளையாட்டு வீரர்கள்இப்போட்டியில் பங்கு பெறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எடுத்தக்காட்டாகும் என்றார்.
ஆறு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தற்போதைய சாம்பியனான சென்னையின் பிராந்திய விளையாட்டு வாரிய அணி உள்பட நாடு முழுவதும் இருந்து32 அணிகள் கலந்து கொள்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications