கூட்டணியில் மாற்றம் வரும் .. கூறுகிறது பா.ஜ.க.
டெல்லி:
சட்டசபைத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கூறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டது. இதையடுத்து லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பாரதீய ஜனதாக் கட்சிஅதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிட்டுள்ளது.
கட்சி செய்தித்தொடர்பாளர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
அதிமுகவில் சேர்ந்துள்ளதால் பா.ம.க.வுக்கு லாபமா, நஷ்டமா என்பதை இப்போது கூறுவது மிகவும் கடினம். சிலதினங்களில் எல்லாம் தெளிவாகத் தெரியும்.
அதிமுகவில் உள்ள பல கட்சிகள், பா.ம.க.வின் வரவை விரும்பவில்லை என்று கேள்விப்படுகிறோம்.
டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் அமருவதுஇயலாத காரியம். இருவரும் தங்களுக்கென தனி வாக்கு வங்கியை வைத்துள்ளார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் கூட ராமதாஸ் வரவை விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவேராமதாஸ் முடிவு குறித்து இப்போதைக்கு கருத்துத் தெரிவிப்பது இயலாத காரியம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பா.ம.க.