For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவியம் மூலம் நிதிவசூல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தலைநகர் டெல்லியில் உள்ள வதேரா ஆர்ட் கேலரியில் எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

எம்.எப்.ஹூசேனின் மதர் அன்ட் சைல்டு என்ற ஓவியம் வதேரா ஆர்ட் காலரியில் திங்கள்கிழமை கண்காட்சியாக வைக்கப்பட்டது. இந்த ஓவியம் ரூ10.5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியத்தை சச்சின் கோஹிலி என்பவர் ஏலம் எடுத்தார்.

வதேரா காலரியில் வேலை செய்யும் சுரேஷ் என்பவர் கூறுகையில், இந்த ஓவியத்தை ஏலம் விட்டது மூலம் கிடைக்கும் பணம் ஜனவரி 26 ம் தேதிகுஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கப்படும்.

மதர் அன்ட் சைல்டு ஓவியம் ஏலம் விடப்பட்டது குறித்து ஓவியர் ஹூசேன் கூறுகையில், எனது ஓவியத்தில் உள்ள கருப்பு நிறும் மனித உயிர்களின் இறப்பைக்குறிக்கும். சிவப்பு நிறம் மனிதர்களின் வாழ்வைக் குறிக்கும். குஜராத் மீண்டும் உயிர்பிழைக்கும் என்று நம்பலாம் என்றார். இந்த ஓவியத்தை வாங்கியசச்சின் கோஹிலி ஏற்கனவே ஹூசேனின் 3 ஓவியங்களை வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X