அரசியலில் இது சகஜம் .. நாராயணசாமி
பாண்டிச்சேரி:
அ.தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொடர்ந்துஅ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்விக்கு பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சிதலைவர் நாராயணசாமி கருத்து கூற மறுத்து விட்டார்.
பா.ம.க.வை கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் அந்த கட்சி உள்ள அ.தி.மு.க. வில்தொடர்ந்து நீடிக்க முடியுமா என நிருபர்கள் கேட்டபோது அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என பதிலளித்தார்.
அதன் பின் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க. பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிகுறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இரு தினங்களில்வர இருக்கிறார்.
பா.ம.க. பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்போம் என நிலையில் உறுதியாகஇருந்தாலும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் பலமான சக்தியாக இருக்கிறது என்பதுதான்உண்மை.
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி, கட்சி தலைமையிடம் கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டது. ஆனால் இந்த கோரிக்கை பா.ம.க.,அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு முன் விடுக்கப்பட்டது எ ன கூறினார்..
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications