மீள்கிறது மின் வசதி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அஞ்சார் நகரில் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தேசிய மின்உற்பத்திக் கழகமும், மின் விநியோக நிபுணர்களும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தேசிய மின்சார உற்பத்திக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அஞ்சார் நகரில் மின்விநியோக நிலையம் ஒன்றை இவர்கள் அமைத்துள்ளனர். தேசிய மின் உற்பத்திக் கழகம் (என்.டி.பி.சி.) மற்றும்மின் விநியோக அமைப்பு ஆகியவற்றில் உள்ள என்ஜினியர்கள் குழு, நாகட்ரானா, மாதாப்பூர், கோல்டா மற்றும்கேடோய் நகரங்களில் மின் விநியோகத் துணை நிலையங்களை அமைத்துள்ளனர்.

அங்கிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. லாக்கோன்ட் மற்றும் தோதாய் ஆகிய இடங்களிலும்மின்சார விநியோக துணை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 85 என்ஜினியர்கள் குஜராத் மாநிலத்தில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய மின் உற்பத்திக் கழகம் சார்பில் 35 லாரிகளில் 70,000 கிலோ உணவுப் பொருட்கள், 4,200 கம்பளிகள்,சால்வைகள், புடவைகள், 300 கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளது.

இவை தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குசேர்க்கப்படும் காயமடைந்தவர்களுக்கு 8 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

என்.டி.பி.சி. சார்பில் இடிபாடுகளை நீக்குவதற்காக இரண்டு கிரேன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. என்.டி.சி.பி.யின்பொதுமேலாளர் ஜெயின் பாதிக்கப்பட்ட பூஜ் மற்றும் பிற பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் என்றுகூறப்பட்டிருந்தது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+