கோவையில் சுதேசி தொழில் கண்காட்சி
சென்னை:
கோவையில் நடைபெறும் சுதேசி தொழில் கண்காட்சி 2001 துவங்கி வைக்க பிரதமர் தமிழகம் வருகிறார்.
சுதேசி ஜாக்ரான் மஞ்சின் ஒரு பிரிவான கோவை பாரதீய விற்பனை மேம்பாடு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியை பிப்ரவரி 16ம் தேதிபிரதமர் துவக்கி வைக்கிறார்.
இந்தியாவிற்கேற்ற இந்திய தொழில்கள் மற்றும் சுதேசி தொழிலே பிரதானம், வெளிநாட்டு தொழில்கள் சுதேசிக்கு உறுதுணையாக அமையுமேதவிர சுதேசிக்கு மாற்று அல்ல என்ற கருத்துடன் இக்கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
இந்தியர்களால் நடத்தப்படும் பல்வேறு வகையான சுதேசித் தொழில்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் அவற்றின் வளர்ச்சிக்காக இக்கண்காட்சிநடத்தப்படுகிறது.
பல்வேறு வகை தொழில் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறும்.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, பவானி,நாமக்கல், ஹோசூர்,ராணிப்பேட்டை,சென்னை, மதுரை, திருச்சி,தூத்துக்குடி,விருதுநகர், சிவகாசி போன்ற பலபகுதிகளில் உள்ள மரபு வழித்தொழில்கள் பற்றியும் அதன் நிலை பற்றியும் இக்கண்காட்சியில் விளக்கப்படும்.
இக்கண்காட்சியில் பன்னாட்டுக்கம்பெனியின் தயாரிப்புகள் எவ்வாறு உள்ளூர் தயாரிப்புகளை பாதிக்கின்றன என்பது பற்றியும் விளக்கப்படும்.
மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரமோத் மகாஜன், சரத் யாதவ், காசிராம் ராணா, மற்றும் டி.ஆர்.பாலுஆகியோர் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.
இத்தகவல்களை சுதேசி ஜாக்ரான் மஞ்சின் கோவை பகுதி அமைப்பாளர் குருமுர்த்தி கண்காட்சி குறித்த நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
யு.என்.ஐ.