"வீரப்பன் குறித்து தகவல் தந்தால் பரிசு
கோயம்புத்தூர்:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சநதிரே கவுடர்பற்றி தகவல் தருவோருக்கு ரூ 40 லட்சம் பரிசு வழங்கப்படும் என வாளையாறு காட்டுபகுதியில் இருக்கும் கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சங்கேத வார்த்தைகள்கொடுக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணயில் ஈடுபடும் குழுவுக்குஈகிள் எனவும், உயர் அதிகாரிகளுக்கு சீட்டா, டஸ்கர் எனவும் சங்கேத பெயர்கள்கொடுக்கப்பட்டுள்ளன.
100-க்கும் அதிகமான போலீஸ் குழுவினருக்கு வயர்லஸ் மூலம் தகவல் சொல்லும்வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. சங்கேத பெயர்கள், தகவல் தொடர்பு திட்டங்கள்மூலமாக குறிப்பிட்ட அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு குறிப்பிட்ட அணியினரைசென்றடையும் வசதி ஏற்படும்.
கோவைப் புதூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில்தங்கியிருந்த தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் திங்கள்கிழமை காட்டுக்கு சென்றுவந்தார்.
கோவை வந்த கூடுதல் டி.ஜி.பி.அலெக்சாண்டர், தமிழகம் மற்றும் கர்நாடக சிறப்புஅதிரடிப்படை தலைவரும், தமிழக ஐ.ஜி.யுமான பாலச்சந்திரன் ஆகியோரும்திங்கள்கிழமை காட்டுக்குள் சென்று வந்தனர்.
இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குஊக்கமளித்து விட்டு வந்தார்கள். மேலும் சென்ற வெள்ளிக்கிழமை வீரப்பன்நடமாட்டத்தை கண்டுபிடித்ததாக கூறிய 13 நபர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ5,000 பரிசாக டி.ஜி.பி. ராஜகோபாலன் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications