பதவி ஆசை இல்லை .. கூறுகிறார் இளங்கோவன்
சிவகாசி:
எனக்கு பதவி ஆசை கிடையாது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.
விருதுநகரில் நடந்த மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுஅவர் பேசுகையில், வரவிருக்கும் தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்,ஆட்சி அமைக்கும் கட்சிக்கு நம் கட்சி தான் அடித்தளமாக இருக்கும்.
நம் கட்சிக்கு அமைந்தது போன்ற சிறந்த தலைவர் இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும்அமையவில்லை.
சோனியா காந்தி கும்பமேளாவில் பங்கேற்றதைக் கூட எதிர்க்கட்சிகள்விமர்சிக்கின்றன. இது வரை நாம் கடைபிடித்து வந்த நிதான போக்கை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சோனியாவின் ஆணையை ஏற்று செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யமுடியாவிட்டால் நானே வீட்டுக்கு போய்விடுவேன். என்னை யாரும் வீட்டுக்கு போஎன சொல்ல வேண்டாம். பதவி ஆசையும் எனக்கு கிடையாது.
தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியில்போட்டியிடுவது என கட்சி தலைமை முடிவு செய்யும்.கட்சி தலைமையின் முடிவுக்குகட்டுப்பட்டு நாம் செயல்படுவோம் என கூறினார்.
முன்னதாக மேடையின் மீது நிறைய பேர் ஏறிக் கொண்டே இருந்ததால் கோபம்கொண்ட இளங்கோவன் பாதியில் பேச்சை நிறுத்தி விட்டு மேடையை விட்டு கீழேஇறங்கி வந்து அமர்ந்து கொண்டு விட்டார். மேடையிலிருந்து பலரும் இறங்கிய பின்மீண்டும் மேடைக்கு சென்று பேச்சை தொடர்ந்தார்.