For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

14--வது சென்சஸ் .. வெள்ளிக்கிழமை துவங்குகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ள 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி சந்திர மெளலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படும் 14வது மக்கள் தொகைகணக்கெடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 1,20,000 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.

நகர்ப்பகுதி கணக்கெடுப்பாளர் ஒருவர் 650 பேர் பற்றியும், கிராமப்புற கணக்கெடுப்பாளர் ஒருவர் 750 பேர் பற்றிய விபரங்களையும் சேகரிப்பர்.அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தங்கள் வீடுகளுக்கு வரும் போது மக்கள் அளிக்க வேண்டும்.

பிப்ரவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும் கணக்கெடுக்கும் பணி முடிந்ததும் அதனை சரிபார்க்கும் பணி மார்ச் 1 முதல் 5 வரை நடைபெறும்.

பிப்ரவரி 28ம் தேதி இரவு வீடற்றோர் மற்றும், ரோட்டோர மக்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெப்சைட்டில் வெளியிடப்படுவதோடு இவற்றின் சி.டி.ராம்களும் வெளியிடப்படுகின்றன என்றுஅவர் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X