உஸ்தாத்தின் நிதி வசூல்
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனிற்காக ஷெனாய் இசை மாஸ்ட்ரோ உஸ்தாத் பிஸ்மில்லாகான் இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இசைத் துறையில் குறிப்பாக ஷெனாய் இசையில் பல சாதனைகள் புரிந்தவர் பிஸ்மில்லா கான். வயது 74. இவர்பாரத் ரத்னா விருது பெற்றவர்.
இவர் இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி குஜராத் மக்களுக்காக நிதி வசூல் திரட்டத் திட்டமிட்டுள்ளார்.அவர் கூறுகையில், நான் மக்களை வற்புறுத்த மாட்டேன். மக்கள் விரும்பினால் குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அல்லது நிவாரணப் பொருட்களை வழங்கட்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நாம் நம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் நிதியாகவோ, நிவாரணப் பொருட்களாகவோகொடுக்கலாம்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லாதது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் இயற்கையை மீற முடியாது. மக்கள் இதை உணர்ந்து அரசைக் குறைகூறுவதை விட்டு விட்டு தங்களால் முடிந்த அளவு குஜராத் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்பிஸ்மில்லா கான்.
ஐ.ஏ.என்.எஸ்.