மாநகராட்சிக் கூட்டம் .. அனுமதி கோருகிறார் "மிசா
சென்னை:
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் உள்ள மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன், தன்னைமதுரை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
மதுரை நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட காலமாகத்தேடப்பட்டு வந்தார் மிசா. பாண்டியன். போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்த அவர் கடந்தமாதம், செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டார். தற்போது மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிகோரியுள்ளார் பாண்டியன்.
மாநகராட்சிக் கூட்டங்களில் ஒரு கவுன்சிலர் தொடர்ந்து 2 கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால், உறுப்பினர்பதவியை இழந்து விடுவார் என்பது விதி. எனவே தன்னை இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்என்று உயர்நீதிமன்றத்தில் பாண்டியன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications