For Daily Alerts
Just In
அயோத்தி: கோர்ட் முடிவை முஸ்லிம் லீக் ஏற்கும்
புதுக்கோட்டை:
அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்றுக் கொள்ளும் என்று அதன் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை வரை ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்டது. அது தொடர்பானநிருபர் கூட்டத்தில் பேசிய அவர்,
பிப்ரவரி 1ம் தேதி தொடங்கிய யாத்திரையை காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட பலர் வெற்றியடைய வாழ்த்தியுள்ளனர். நாட்டில் இளைஞர்கள் மனதில் சமுதாயரீதியாக வன்முறை எண்ணம் தோன்றியுள்ளது.
இதனை மாற்றவும் இந்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றே என வலியுறுத்தியும் இந்த ஒற்றுமை யாத்திரை நடைபெறுகிறது.
சமீப காலமாக பாரதீய ஜனதாக் கட்சியின் செயல்பாடுகள் அனைத்துதரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாறி வருவது மகிழ்ச்சியானதுஎன்று அவர் தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]