விடுதலைச் சிறுத்தைகள் நிலை என்ன?
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் நாங்கள் நீடிக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திட்டக்குடி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைப்பொறுத்தவரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி யாருமே மக்களுக்காகவும், தலித் மக்களுக்காகவும் எதையும்செய்யவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தலித் மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். திமுக ஆட்சிக்காலத்தில், தலித் மக்களுக்குஎதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
பா.ம.க.வை எதிர்ப்பதுதான் எங்களது முதல் நோக்கம். எனவே அக்கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும்நாங்கள் அங்கு இருக்க மாட்டோம். இதில் தெளிவாக இருக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications