பா.ம.க.வின் முதல் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக அணியிலிருந்து விலகி அதிமுக அணியில் சேர்ந்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தி.மு.க. எதிர்ப்பு போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
பா.ம.க. சார்பில் புதன்கிழமை சென்னை கிண்டி, மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தியது.
உடல் ஊனமுற்றோர், முதியோர், விதவை ஆகியோருக்கு உதவித் தொகை வழங்க காலதாமதம் செய்யும் அதிகாரிகளை தண்டிக்க கோரி போராட்டம்நடத்தப்பட்டது. பின்னர் உதவித்தொகை வேண்டி 250 மனுக்கள் மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டன.
போராட்டத்திற்கு பா.ம.க. மாநில அமைப்புக்குழு தலைவர் சி.ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்க, தென்சென்னை மாவட்ட பா.ம.க மகளிரணி தலைவர்கலா தினகரன் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications