சபர்மதியில் அஞ்சலி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள், அகமதாபாத்தில் உள்ள சபர்மதிஆற்றில் புதன்கிழமை கூடி, 12-வது நாள் காரியங்களைச் செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.
குஜராத் பூகம்பத்தில் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்த மக்கள், அனைவரும் கூடி சூரியனை நோக்கிக் கை உயர்த்தி, வேத மந்திரங்கள் ஓதி அஞ்சலிசெலுத்தினார்கள். சபர்மதி ஆற்றில் கூடியிருந்த அனைவரும் வெள்ளை வேட்டி அணிந்து இறுதிச் சடங்குகள் செய்தார்கள்.
தனது சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த ராஜேஷ் படேல் என்பவர் கூறுகையில், பூகம்பத்தில் எனது கடைசி சகோதரர் முகேஷ் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்து இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். விரைவில் எனது சகோதரர் முகேஷை கனடாவுக்குஅழைத்துச் செல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றார்.
திங்கள்கிழமை முதல் சபர்மதி ஆற்றில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கான அஸ்தி கரைப்பு மற்றும் இதர சடங்குகள் தொடங்கின. இந்தச் சடங்குகள்வியாழக்கிழமை வரை நடக்கும்.
இதுதவிர விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக கோசேன்ட்ரா மடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் நூற்றுக்கும்மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications