கோர்ட்டுக்கு வராவிட்டால் .. ஜெ.வுக்கு நீதிபதி எச்சரிக்கை
சென்னை:
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராவதுஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என தனி நீதிமன்ற நீதபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ 6 கோடி சொத்துசேர்த்ததற்கான வழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டயாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர்கள் தங்களால் வர இயலாது என இவர்கள்சார்பில் 317-வது பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். ஆனால் வழக்குவிசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராவது ஆஜராக வேண்டும்என முன்னரே கூறப்பட்டிருந்தும் ஒருவரும் ஆஜராகவில்லை. இனி இவ்வாறு நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஆனால் ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வரும் போது போக்குவரத்து பிரச்சினைஏற்படுவதால் அவர் நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications