அராணுவ பட்ஜெட்டை உயர்த்தியது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நடப்பாண்டிற்கான இலங்கையின் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு 6339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இலங்கையில் புதிய அரசு அமைந்துவிட்டபோதும் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதால் இடைக்காலபட்ஜெட் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரினால் பாதுகாப்புத் துறை செலவு அதிகரித்துள்ளது. இலங்கை கரன்ஸியின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால்பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் செலவினங்களில் 36,400 கோடியில் 24,700 கோடியை கடனாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஆண்டைக்காட்டிலும் 45% குறைந்து விட்டது. அரசின் கரன்ஸி மதிப்பும் கடந்த 12 மாதங்களில் 27.5%வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications