பெருகுகிறது அணு மின்னுற்பத்தி
திருச்சி:
வரும் 2020ம் ஆண்டுக்குள் அணு மின் உற்பத்தி 20,000 மெகா வாட்டாக உயர்த்தப்படும் என்று சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சிமையத்தின் இயக்குநர் எஸ்.பி.போயே தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது உற்பத்தி செய்யப்படும் 2720 மெ.வாட் மின்சாரம் நாட்டின் மின் உற்பத்தி திறனில் 3 சதவீதமாகும்.இது 20,000 மெ.வாட்டாக அதிகரிக்கப்பட்டு நாட்டின் மின்னுற்பத்தியில் 7சதவீதமாக இருக்கும் என்றார்.
கல்பாக்கம் ஆராய்ச்சி மையம், 3000 கோடியில் 500 மெ.வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அணுஉலை ஒன்றை நிறுவ மத்திய அரசிடம் அனுமதிபெற்றுள்ளது.
திட்டத்திற்கான விரிவான அறிக்கை ஜுன் மாதத்திற்குள் அளிக்கப்படும். 2008ம் ஆண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
அணு மின் திட்டத்திற்கான அணு சக்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும் அணுமின் உற்பத்திதிறன் 1995-96ல் 60%என்ற நிலையிலிருந்து 80% ஆக அதிகரித்துள்ளது. இதனால் அணுமின்னுற்பத்திக் கழகம் மத்திய அரசிற்கு கடந்த ஆண்டு 61.48 கோடி ரூபாய் டிவிடென்டாகஅளித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications