உதவுகிறது பிஜி

Subscribe to Oneindia Tamil

சுவா:

குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படும் வகையில் 20, 000 டாலர்கள்அளிக்கவுள்ளதாக பிஜி தீவின் இடைக்கால அரசு கூறியுள்ளது.

பிஜித் தீவு அதிபர் ராஜூ ஜோசேபா இலாய்லோ, பிரதமர் லைசேனியா க்வாரசே, வெளியுறவுத்துறை அமைச்சர் காலியோபேட் தோவாலா ஆகியோர்குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பிஜி மக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக இந்திய அரசுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து பிஜியிலிருந்து குஜராத் பூகம்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் பிஜி அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

அப்போது, பிஜியில் ஏற்கனவே இதுபோன்ற இயற்கைச் சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் பிற நாடுகளுக்கு திடீரென்று இயற்கைச் சீரழிவுகள்ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக பிஜி அரசு முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று இயற்கைச் சீரழிவு நிவாரணக் கொள்கைஉருவாக்கப்பட்டது.

1993-ம் ஆண்டு இந்தியாவில் மகாராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள லத்தூரில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 10, 000 பேர் கொல்லப்பட்டனர்.அப்போது பிஜியும் நிவாரண உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் பிஜி தீவைச் சேர்ந்த மக்கள் பலர் வசித்து வருகிறார்கள். பிஜி - குஜராத் சமாஜ் மற்றும் பிஜி செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை குஜராத்தில்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் செய்து வருகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+