அரசு ஊழியர் 10-வது மாடியிலிருந்து குதித்து சாவு
டெல்லி:
டெல்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உதவியாளர், தனது அலுவலகத்தின்10-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
புதன்கிழமை காலை இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. அவரது பெயர் பிரபாகரன் (வயது 40). வெளியுறவுத் துறைஅமைச்சகத்தில் மனித ஆற்றல் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமைதான் தனதுபதவியை ராஜினாமா செய்திருந்தார் அவர்.
அவரது தற்கொலை குறித்து நியூடெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்.பி.எஸ்.விர்க் கூறுகையில், தனதுராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு விட்டதா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக பிரபாகரன் காலையில்அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவருக்கு யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து தனது அலுவலகம் அமைந்துள்ள சானக்கியபுரிக்குச் சென்று, அலுவலகத்தின் 10-வது மாடிக்குச்சென்றார். அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கீழே விழுந்த உடனேயே பிரபாகரன் இறந்து விட்டார். தற்கொலைக்கான காரணம் எதையும் அவர்குறிப்பிடவில்லை. சொந்தக் காரணங்களுக்காகவே அவர் இறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
1991-ம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாரத்து செய்தார். அப்போது முதலே மன நிலை சரியில்லாமல்இருந்து வந்தார். தனது ராஜினாமாக் கடிதத்திலும் கூட, தனக்கு மனநிலை சரியில்லாததாலும், வயதானபெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார் என்றார் விர்க்.
ஐ.ஏ.என்.எஸ்.