மனிதன் டைனோசராகி விடுவான் .. விஞ்ஞானி எச்சரிக்கை
கோவை:
உலகம் முழுவதும் ஒரே சீரான முறையில் இயற்கையை பாதிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில்,ஒவ்வொரு உயிரினமும் டைனோசரைப் போலவே மறைந்து போகும் அபாயம் ஏற்படும் என கனடா நாட்டு கோல்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவையில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.
கோவையில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வருகை தந்த கனடா நாட்டுக்கோல்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜார்ஜ் பேசியதாவது:
உயிரினங்களில் 99 சதவீதம், இயற்கைக்குத் தீங்கு செய்யாதவை, மனிதன் மட்டுமே இயற்கையை அழித்து, தன் தேவையைப்பூர்த்தி செய்துகொள்ள முயல்கிறான். உலகில் எந்த உயிரினமும் இயற்கைக்குத் தீங்கு செய்வதில்லை. அவை இயற்கையோடுஒன்றி வாழ்கின்றன. கிடைத்ததை உண்டு வாழ்கின்றன.
சில மிருகங்கள் மட்டுமே பிற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது சிறப்பு உயிரினஉரிமையில் அனைத்தையும் தன் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றன. இதனால், இயற்கையின் சமச்சீரமைப்பு மாறி விடுகிறது.
பூச்சிகளில் 99.9 சதவீதம் மனிதனுக்குத் தீங்கு செய்யாதவை. இதில் 0.1 சதவீதம் மட்டுமே தீமையை ஏற்படுத்துகின்றன. இவற்றைஅழிக்க மனிதன் டி.டி.டி என்ற மருந்தைப் பயன்படுத்தினான். ஆனால், அதனால் மனிதனுக்கே தான் தீங்கு ஏற்பட்டுள்ளது.புற்றுநோய் வரக் காரணமாக இது அமைந்து விட்டது.
பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. இதனால் தைராய்ட் சுரப்பியில் மாற்றம்ஏற்படுகிறது. இதனால், 8 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பு எய்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் மக்கள் தொகையில் அமெரிக்காவில் 4 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால் இவர்கள், 23 சதவீதம் கார்பன் டைஆக்சைடை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அதேசமயம், மற்ற நாடுகளை கார்பன் டை ஆக்சைட் பயன்பாட்டைக் குறைக்கச்சொல்கிறது அமெரிக்கா.
உலகம் முழுவதும் ஒரே சீரான முறையில் இயற்கையை பாதிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில்,ஒவ்வொரு உயிரினமும் டைனோசரைப் போலவே மறைந்து போகும் அபாயம் ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications