பரந்த உள்ளத்தைக் காட்டுங்கள் .. கண்ணன் உருக்கம்
புதுச்சேரி:
புதுவையின் முன்னாள் அமைச்சர் கண்ணன், தி.மு.க. கூட்டணியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
புதுவையில் நடைபெற்ற செய்தித்தாள் ஒன்றின் புதுவை பதிப்பு வெளியீட்டு விழாவில் பேசிய கண்ணன், புதுவை தி.மு.க.ஆட்சியை கவிழ்த்து காங்கிரஸ் ஆட்சிஅமைக்க காரணமானது உள்பட பல தவறுகளை நாங்கள் செய்திருக்கிறோம். அதுபோல் தி.மு.க.வினரும் தவறுகளை செய்திருக்கின்றனர். எனவே,தவறுகளை மன்னித்து தங்களின் பரந்த உள்ளத்தை காட்ட வேண்டும், என்று கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் கருணாநிதி பேசிய போது , கண்ணன் தி.மு.க. கூட்டணியில் சேருவதை ஏற்றுக் கொள்வதாகவும், கண்ணனின் பேச்சு புண்பட்ட மனதிற்கு ஒத்தடம் தருவதுபோல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கண்ணன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ள புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் பேசியபோது,தி.மு.க.கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தனர். முதலமைச்சர் பதவி உள்ளிட்ட கூட்டணியின் மற்ற விஷயங்களை கருணாநிதி முடிவு செய்வார்என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications