விரைவில் கூடங்குளம் அணு மின் நிலையம்?
திருச்சி:
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்கான திட்ட அறிக்கையை அணுமின்உற்பத்திக்கழகம், அணுசக்தி பாதுகாப்பு வாரியத்தின் அனுமதிக்காக விரைவில் அளிக்கும் என்று கல்பாக்கம்இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் எஸ்.பி.போயே தெரிவித்தார்.
இத்திட்டத்தின் பாதுகாப்புத்தன்மை குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜன்சி ஏற்கனவே ஆராய்ந்து அனுமதி அளித்துவிட்டது என்று திருச்சியில் நிருபர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் அமைவதால் கூடங்குளம் பகுதியில் குடிநீர் மற்றும் கதிர்வீச்சுத்தன்மை குறித்து மக்களிடையே நிலவும்அச்சம் குறித்து கேட்டபோது.... கூடங்குளத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்படும். இதனால்குடிநீர் பிரச்சினை வராது என்றார்.
பாதுகாப்புத்தன்மை குறித்த கேள்விக்கு , பேட்டியின் போது உடனிருந்த மும்பை பாபா அணு ஆராய்ச்சிமையத்தின் சுகாதாரம்,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் டாக்டர்.வி.வி.வெங்கட்ராஜ்கூறியதாவது,
செர்னோபில் விபத்து , அத்திட்டத்தின் வடிவமைப்பில் காணப்பட்ட குறைபாடும் அங்கிருந்த ஊழியர்களின்கவனக்குறைவும் இணைந்த ஒரு சூழ்நிலையில் ஏற்பட்டதாகும். அது போன்ற குறைகள் கூடங்குளம் திட்டத்தில்இல்லை.
கதிர்வீச்சானது குறிப்பிட்ட அளவைக் கடக்கும்போது ரியாக்டர்கள் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications