தென்னகத்து கும்பமேளா .. லட்சம் பக்தர்கள் நீராடினர்
திருமாக்கடலு (கர்நாடகா):
கர்நாடக மாநிலத்தில், காவிரி, கபிலா, சப்திகா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடந்ததக்ஷின கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுவியாழக்கிழமை புனித நீராடினர்
இந்த கும்பமேளாவின் கடைசி 3 நாட்களில்தான் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள். தக்ஷின கும்பமேளா நடைபெறுவது குறித்து ஒரு புராணக்கதைஉண்டு. அது:
மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு மேலேபறந்து சென்ற போது, தான் கொண்டு வந்த தேனை இங்கே போட்டதால் இந்த இடம்புனிதமானது. இதனால் இங்கு குளிப்பது புனிதமாக கருதப்படுகிறது.
கருடன் தேனை போட்ட நிகழ்ச்சியை குறிக்கும் விதமாக தக்ஷின கும்பமேளாநடந்தது. வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு 21 பெண் பக்தர்கள் செளடேஸ்வரிஅம்மன் கோவிலிருந்து நீர் நிறைந்த கலசங்களை நதிகள் சங்கமிக்கும் இடத்திற்குகொண்டு வந்தனர்.
ஸ்வாமிஜி கலசங்களுக்கு பூஜை செய்து அதில் இருக்கும் நீரை நதி சங்கமத்தில்தெளித்து அந்த நீரை புனித்து நீராடுதலுக்காக சுத்தப்படுத்தினார். அதன் பின் பக்தர்கள்புனித நீராடினர்.
இந்த கும்பமேளாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் போலீசார் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
யு.என்.ஐ,












Click it and Unblock the Notifications