எங்களுக்கு மரியாதை இல்லையா .. கொதிக்கிறார் ஒடும்பே
நைரோபி:
கென்ய கிரிக்கெட் அணியிலிருந்து தன்னை நீக்கியது ஆத்திரமூட்டும் செயல் என்று நீக்கப்பட்ட அணித்தலைவர் மோரீஸ் ஒடும்பே தெரிவித்தார்.
எங்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானதே எனும் ஒடும்பே, பந்துவீச்சாளர்கள் எல்லாம் அவர்களுக்கு "பால் பாய்".அவர்களுடன் நமக்கென்ன பேச்சு என்பதே வாரிய உறுப்பினர்களின் கண்ணோட்டம்.
அணி வீரர்களை நீக்கிய கிரிக்கெட் வாரியத்தின் செயல் மரியாதையற்ற ஒன்று என்றும்கொதிக்கிறார்.
வாரியத்தின் உறுப்பினர் சர்க்கார் கூறும்போது, வீரர்களின் போராட்டத்திற்கு காரணம்ஒடும்பே தான். பத்திரிகைகளுக்கு பேட்டியளித்ததற்காக ஒடும்பே மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே, இது குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. மேற்கொண்டுதகவல்கள் கிடைத்தபின் விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்கும் என்றுஅதன் செய்தி தொடர்பாளர் மார்க் ஹாரிஸன் லண்டனில் தெரிவித்தார்.