எங்கள் த.மா.கா.வே உண்மையானது .. கண்ணன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையிலிருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நீக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டிருப்பது, தமிழ் மாநில காங்கிரஸ் மனோகர் பிரிவுதான் உண்மையான த.மா.கா.என்று காட்டுகிறது என்று பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சர்கண்ணன் கூறினார்.
பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகரால் 3 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதைஎதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், சபாநாயகரின் தீர்ப்பை ரத்து செய்து கோர்ட் வியாழக்கிழமைஉத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து புதுவையில் நிருபர்களைச் சந்தித்த கண்ணன், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி, தமிழக முதல்வர் கருணாநிதி உள்ள தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர்ந்து கட்சியை வலுப்படுத்தும்.
காங்கிரசும், தமிழ் மாநில காங்கிரசும் தி.மு.க கூட்டணியில் இணைய வேண்டும். மனோகர், ஏழுமலை, ராஜசேகரன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும்எனது அனைத்து விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவதாக என்னைச் சந்தித்து உறுதியளித்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.