பண மோசடி .. அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு
கோவை:
மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 40 ஆயிரம் மோசடி செய்தசென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க தொழிற்சங்கத் தலைவியைப் போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் வனஜா. இவர் சென்னையில் ஆட்டோ ரிக்ஷாதொழிற்சங்கத்தில் 1995ம் ஆண்டு பொருளாளராகப் பணியாற்றினார்.
சமீபத்தில் சொந்த வேலையாக கோவை வந்தார். அங்கு உறவினர்களைப் பார்க்கவந்தார். அப்போது இருகூரைச் சேர்ந்த கண்ணகி, தேவி, தமிழ்ச் செல்வன்ஆகியோரிடம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவாகக் கூறி ரூ. 1 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.
இதில் 60 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்னை சென்று விட்டார்.இந்நிலையில் மீண்டும் கோவைக்கு அவர் திரும்பி வராததால், பணம் கொடுத்த 3பேரும் சந்தேகமடைந்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் பேலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை வருகின்றனர்.