For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளை மாளிகை அருகே திடீர் பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் மாளிகை அருகே துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட ராபர்ட் பிக்கெட் என்பவரை பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அமெரிக்க ரகசியசேவைப் படை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது.

கைத்துப்பாக்கியை கீழே போட மறுத்த அவரை முழங்காலிற்கு கீழே சுட்ட அப்படையினர் அவரை கைது செய்தனர். பின்னர் ஜார்ஜ் வாஷிங்கடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை நன்றாக உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஏரி பிளெஸ்ஷர் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற போது அதிபர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதிபரின் மனைவி டெகஸாஸில் இருந்தார். துணை அதிபர் டிக் செனி அவருடையஅலுவலகத்தில் பணியிலிருந்தார். இது பற்றிய தகவல் பின்னர் அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்பில்லை என்ற பிளெஸ்ஷர் மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். அதிபரை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதுவரை இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. வெள்ளை மாளிகையில் 1995ல் ஒரு பைலட் சிறு விமானமொன்றை மோதச் செய்து அதில் உயிரிழந்தார்.அதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர் அமெரிக்க வருவாய்த்துறையில் பணிபுரிந்து 1980ல் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பணிநீக்கத்தை எதிர்த்து அவர் செய்தமுறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால் அவருக்கிருந்த கோபத்தை காட்டவோ, அல்லது மற்றவர்களின் அனுதாபத்தை பெறவோ அவர் இவ்வாறு செய்திருக்கக்கூடும் என்றுஅவரைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X