வீரப்பன் குறித்த துப்பு .. ஆதிவாசிக்கு ரூ. 10,000 பரிசு
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பன் குறித்த தகவலை அளித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசி அய்யப்பனுக்கு ரூ. 10,000 சன்மானம் அளிக்கப்பட்டது.
தகவல் அளித்த அய்யப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பளிக்கப்படும் என்று கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின்போது புறநகர் போலீஸ் டி.ஐ.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கூடுதலாக மேலும் 200 தமிழ்நாடு கமாண்டோ படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோப்பநாய்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படும். தேடுதல் வேட்டை பற்றி அதிரடிப்படையிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் அனைத்தும்பத்திரிகைகளுக்கு அளிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications