For Quick Alerts
For Daily Alerts
Just In
மலையிலிருந்து பஸ் விழுந்து 5 பேர் பலி
கம்பம்:
தமிழக அரசு பஸ் ஒன்று, தேனி மாவட்டம், கம்பம் சாலையில் உள்ள100 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில்,பஸ் டிரைவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
லோயர் கேம்ப் என்ற பகுதியில் புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது. விபத்தில் சிக்கிய பஸ்குமுளியிலிருந்து, கம்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழக-கேரள எல்லையில், வந்தபோது பஸ்பள்ளத்தில் விழுந்தது.
விபத்தில் ரன்னிகரிக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த சாக்கோ (25), பஸ் டிரைவர் ராஜன் (48), கம்பத்தைச் சேர்ந்தசுரேஷ் (28), ஜான்சன் (30), நடராஜன் ஆகியோர் இறந்தனர். நடராஜன், குமுளியிலுள்ள அரசு பஸ்போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வந்தவர்.
காயமடைந்தவர்கள் கம்பம் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 8, 2001, 5:30 [IST]