ஐ.நா.வின் "ஷொட்டு

Subscribe to Oneindia Tamil

பூஜ் (குஜராத்):

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, குஜராத் அரசு சர்வதேச நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் நிவாரணஉதவிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்து வருகிறது என்று ஐ.நா.பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் உள்ள இயற்கைச் சீற்ற நிவாரணக் குழுத் தலைவர் எட்வர்டு பியாரன் கூறுகையில், இது போன்று திடீரென்று ஏற்படும் இயற்கைச்சீற்றங்களைச் சமாளிப்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.

குஜராத் அரசு போதுமான அளவு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது. போட்டி போட்டுக் கொண்டு சர்வதேச நாடுகள் செய்யும் உதவிகளை முறையாகப்பெற்று, அவற்றைப் பாதிககப்டட மக்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்கிறது.

உலக உணவுக் கழகத்திலிருந்து அனுப்பப்படும் உணவுப் பொட்டலங்களும் சரியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தில் ஏற்பட்டபூகம்பத்தால் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

கிராமங்கள், நகரங்களில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை கட்டுவதற்குப் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். இடிபாடுகளுக்கிடையில்கிடக்கும் சடலங்களை அகற்றுவது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குசிகிச்சை அளிப்பதே எங்களது முதல் குறிக்கோளாகும் என்றார்.

பியாரனும், அவரது குழுவினரும் கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பொருட்களைவிநியோகித்து வரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்ச் மாவட்டத்தில் மட்டும் பூகம்பத்தால் 20,000 க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிவாரண நடவடிக்கைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+