எலக்ட்ரானிக் இயந்திரங்களை ஏமாற்ற முடியுமா?
சென்னை:
எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடந்தால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்புக்கள் இல்லைஎன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருதுஞ்ஜய் சாரங்கி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு எலக்ட்ரானிக் இயந்திரங்களைப் பயன்படுத்தினால்அதிக அளவுகள் முறைகேடுகள் ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயாளர் ஜெயலலிதா, இந்திய தலைமைதேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் கூட எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் நடக்கும் தேர்தல்களில் பலமுறைகேடுகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மின்னனுக் கழகம் மற்றும் பி.எச்.ஈ.எல் நிறுவனத்தார்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தருகிறார்கள்.இதனால் தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது முறைகேடுகளோ நடக்க வாய்ப்பில்லை. எங்களுக்குக்கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிப்படி இந்த இயந்திரங்களால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்று நம்புகிறோம்.
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கத் தெரிந்த திறமை வாய்ந்த நிபுணர்கள் இருந்தால் இதில்முறைகேடுகள் ஏற்படவே வாய்ப்புக்கள் இல்லை.
இதே போல் அண்ணா நகரிலிருந்து மத்திய சென்னைக்கு வீடு மாற்றியுள்ள சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறைஆற்காடு வீராசாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர்களை அண்ணா நகர் வாக்காளர் பட்டியிலிலிருந்து ஏன்நீக்கக்கூடாது என்று ஆற்காடு வீராசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தவறுதான்.
அவர் வீடு மாற்றியதற்காக அவரது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது. இதுகுறித்து விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா நகரில் 96,000 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதும் இது போன்றதவறுகளால் நடந்திருக்கலாம்.
தமிழகத்தில் 42 சட்டசபைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடைந்துவிட்டது. அங்கு கள்ள ஓட்டுக்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றார் சாரங்கி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications