For Daily Alerts
Just In
அ.தி.மு.க. விண்ணப்ப வசூல் ரூ. 4.5 கோடி
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட சீட் கேட்டு 5000 பேர் மனுச்செய்துள்ளனர். இவர்கள் மூலம் ரூ. 4.50 கோடி பணம்வசூலாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிட 10,000 ரூபாயும், பாண்டிச்சேரியில் போட்டியிட 7000 ரூபாயும் கட்ட வேண்டும், என்றுஅக்கட்சி அறிவித்திருந்தது.
இதனையடுத்து தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப விற்பனை சூடு பிடித்தது. போட்டி போட்டு அதிமுகவினர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றவண்ணம் உள்ளனர்.இதுவரை 5000 பேர் சீட் கேட்டு மனுச் செய்துள்ளனர். இதன் மூலம் கட்சிக்கு கிடைத்த வருமானம் 4கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.
Comments
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]