இன்று சென்சஸ்
டெல்லி:
21-வது நூற்றாண்டின் முதலாவது இந்திய சென்சஸ் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமைநாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் துவங்குகிறது.
இந்தியா முழுவதும் நடக்கும் இந்த சென்சஸ் பணியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டஊழியர்கள் கலந்து கொண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்கின்றனர்.
மக்கள் தொகையை கணக்கிடுவதோடு மட்டுமல்லாது, பல்வேறு தகவல்கள்,புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படும்.
தொடர்ந்து 20 நாட்கள் வரை இப்பணி நடைபெறும். 28-ம் தேதி, வீடற்றோர்,சாலைகளில் வசிப்போர், தெருவோர குடும்பத்தினர் குறித்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பு நடைபெறும்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 6-வது முறையாக சென்சஸ் பணி நடைபெறவுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளைத் தவிரபிற இடங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெறும்.
இந்தியாவின் வரலாறே இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மூலம் தெரிய வரும்என்பதால், இதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ள இந்தியா மட்டுமல்லாது, உலகநாடுகளும் ஆர்வமாக உள்ளன.












Click it and Unblock the Notifications