For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி நெருக்கடியில் குஜராத்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் மாநிலத்தின் பொருாளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும் முதல்வர் கேசுபாய் படேல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் மாநிலமாக விளங்கி வருவது குஜராத். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதையடுத்து, முதல்வர் கேசுபாய்படேலும், அவரது நிதி ஆலோசகர் ஷெலாட்டும் பூகம்பத்தால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது, குஜராத் மாநிலத்துக்கு பூகம்பத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சமாளிக்க இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். மேலும் அடுத்த2 அல்லது 3 வருடங்களில் குஜராத்துக்கு ரூ 300 பில்லியன் தேவைப்படும் என்று கணக்கிட்டார்கள்.

இருவரும் நடத்திய ஆலோசனைக்குப்பின் முதல்வர் கேசுபாய் படேல் நிருபர்களிடம் கூறுகையில், பூகம்பத்தால் குஜராத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவைச்சமாளிக்க பல வகைகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்துறையில் 1,160 பில்லியனும், சமுதாய வளர்ச்சிக்காக ரூ 483. 13 பில்லியனும்குஜராத் அக்ரோவிஷன் 2010 என்ற வேளாண்மைத்துறை வளர்ச்சிக்காக ரூ 382.97 ம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது குஜராத் மாநிலத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனை மாநிலத்தில் விரிசல் விழுந்த சாலைகள், இடிந்த பாலங்கள், கல்வி நிலையக் கட்டிடங்கள்,சேதமடைந்த அரசு அலுவலகக் கட்டிடங்கள், வர்த்தகத்தை முன்னேற்றுவது, தொழில்துறையை முன்னேற்றுவது ஆகியவையே ஆகும். இதற்காக ரூ 300பில்லியன் தேவைப்படும்.

கட்ச் மாவட்டத்தில் வாழும் செளராஷ்டிர மக்களின் உயிர்நாடியாகக் கருதப்பட்ட கைத்தறி தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குமிகவும் பிரபலமாக விளங்கிய ரசாயன தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து தரமற்றரசாயனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் 50 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அதிக வருமானம் வரும் தொழில்துறையான ஜவுளி தொழிற்சாலை மற்றும் வைர தொழிற்சாலைகள் மிக மோசமான பேரழவை சந்தித்துள்ளன. சூரத்,பலான்பூர் பகுதிகளில் உள்ள வைரத் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு விட்டன. சில தொழிற்சாலைகள் பாதி ஆட்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதுகுஜராத் மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார் முதல்வர் கேசுபாய் படேல்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X